மோடி அரசை வீழ்த்தாவிடில் உயிருடன் இருப்பதற்கு அர்த்தமேயில்லை - புதுவையில் நாஞ்சில் சம்பத் பிரசாரம்

புதுவை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்ட தி.மு.க. பேச்சாளர் நாஞ்சில் சம்பத் மோடி அரசை வீழ்த்த மக்கள் தயாராகக் காத்திருக்கின்றனர் எனக்  கூறினார்.    தமிழகத்தில் பிரசாரம் சூடு பிடித்துள்ள நிலையில் அனைத்து கட்சித் தலைவர்களும் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர் . இந்நிலையில் அரசியலில் இருந்து விலகிய நாஞ்சில் சம்பத் இந்த தேர்தலில் திமுகவில் இணைந்து பிரசாரம் மேற்கொள்வேன் என அறிவித்தார். தனது மேடைப் பேச்சால்  அனைவரையும் கவரும் ஆற்றல் படைத்தவர் நாஞ்சில் சம்பத் .       இன்று, காங்கிரஸ் கட்சி வேட்பாளரை ஆதரித்து  தவளகுப்பம் நான்குமுனை சந்திப்பில் தொடங்கி அரியாங்குப்பம், முதலியார்பேட்டை ஆகிய பகுதியில் நாஞ்சில் சம்பத் பிரசாரம் செய்தார். பிரசாரத்தில் பேசிய நாஞ்சில் சம்பத் , தற்போது பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா அரசை வீழ்த்தும் களத்தில் இல்லையென்றால் "உயிரோடு இருப்பதற்கு அர்த்தமேயில்லை" என்பதற்காகவே திமுக  கட்சியில் இணைந்தேன் . ரபேல் போர் விமானங்கள் ஒப்பந்தத்தில் ரூ.30 ஆயிரம் கோடி மோடி ஊழல் செய்துள்ளார். மோடி இந்தியாவின் பன்முகத் தன்மையை பாழ்டுத்தி விட்டார். மோடியின் ஆட்சியை எந்த தரப்பு மக்களும் விரும்பவில்லை. மோடி அரசை வீழ்த்துவதற்கு அனைத்து தரப்பு மக்களும் தயாராகிவிட்டனர்,எனப் பேசினார்.
More News >>