சாய் பல்லவிக்கும் இயக்குநர் விஜய்க்கும் இடையே காதலா நட்பா? உண்மை என்ன

இயக்குநர் விஜய் இரண்டாவது திருமணம் செய்தி தான் கடந்த இரண்டு நாள்களாக இணையத்தில் ஹாட் டாபிக். மலர் டீச்சராக வலம் வந்து தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் பச்சக் என்று ஒட்டிக் கொண்ட சாய் பல்லவியை இயக்குநர் விஜய் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளப் போவதாக ஒரு தகவல் வெளியானது.  

அஜித்தின் கிரீடம்  படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகனான இயக்குநர் விஜய், விக்ரம் நடிப்பில் தாண்டவம், தெய்வத்திருமகள், ஆர்யா நடித்த மதராசபட்டினம், ஜெயம்ரவி நடித்த வனமகன், சைவம், தேவி, தியா உள்ளிட்ட படங்களின் வாயிலாக தமிழ் திரையுலகில் சிறந்த இயக்குநராக தன்னை அடையாளப்படுத்தி கொண்டிருக்கிறார். கடந்த 2014ஆம் ஆண்டு நடிகை அமலாபாலை காதலித்து திருமணம் செய்துகொண்டார் இயக்குநர் விஜய். அதுவும் பெற்றோர்கள் சம்மதத்துடன் இத்திருமணம் நடந்தது. பிறகு, இரண்டு வருடங்களில் இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு ஏற்பட பிரிந்துவிட்டனர். பின்னர் இருவரும் பரஸ்பரம் பேசி, 2017 ஆம் ஆண்டு பிப்ரவரியில் விவாகரத்தும் செய்து கொண்டனர்.

தற்பொழுது சாய் பல்லவி நடிக்கும் கரு, ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் வாட்ச்மேன் மற்றும் ஜெயலலிதா பயோபிக் உள்ளிட்டவற்றை இயக்கி வருகிறார். `கரு’ படத்தில் சேர்ந்து பணியாற்றும்போது சாய் பல்லவி, இயக்குநர் விஜய் இடையே காதல் மலர்ந்ததாக சினிமா வட்டாரங்கள் கிசுகிசுக்க தொடங்கியுள்ளது. விரைவில் இருவரும் திருமணம் செய்துக் கொள்ளப்போவதாகவும் கூறப்பட்டது.

இதனை இயக்குநர் விஜய் தரப்பு மறுத்துள்ளது. சில ஊடக நண்பர்கள் இயக்குநர் விஜய் தரப்பை தொடர்பு கொண்டு விசாரித்தபோது, ``அவர்களும் இருவரும் நல்ல நண்பர்களாக பழகி வருகிறார்கள். அவர்களுக்குள் எந்த ரிலேஷன்ஷிப்பும் இல்லை’’ என்று பதில் அளித்துள்ளனர்.

விரைவில் 'வாட்ச்மேன்' மற்றும் 'தேவி 2' படங்களுக்கான  பத்திரிகையாளர்கள்  சந்திப்பு நடைபெறவுள்ளது.  அதில், இயக்குநர் விஜய் தனது திருமண வதந்தி தொடர்பாக விளக்கமளிப்பார்  என்று நம்பப்படுகிறது. ஆனால் ஒன்று ஆர்யா, விஷால் விவகாரத்திலும் இப்படிதான் முதலில் கிசிகிசு வெளியாகி பின்னர் திருமண அறிவிப்பு வெளியானது. நெருப்பில்லாமல் புகையாது அல்லவா?

More News >>