தேர்தல் வருது...ஜனங்க ஜாக்கிரதை கரு.பழனியப்பன் வெளியிட்ட சிறப்புப் பாடல்

மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு ‘தேர்தல் வருது...ஜனங்க ஜாக்கிரதை’ என்ற சிறப்புப் பாடலை திரைப்பட இயக்குநர் கரு.பழனியப்பன் வெளியிட்டார்.

டி.இமான் இசையில், யுகபாரதி எழுதியுள்ள இந்த பாடல், கடந்த நான்கரை ஆண்டு ஆட்சியை திரும்பி பார்க்க வைப்பதற்காக உருவாக்கப்பட்டது என்று கரு.பழனியப்பன் தெரிவித்துள்ளார். மேலும், அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரை பாடலை வெளியிடுவது போல், வாக்காளருக்கான விழிப்புணர்வு பாடலாக வெளியாகியுள்ள இந்த பாடல் நிச்சயம் மாற்றத்தை உருவாக்க வாய்ப்பு உள்ளதாகத் தெரிவித்தார்.

இந்த பாடலில், பொள்ளாச்சி பாலியல் வன்கொடூரம், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. தேர்தல் வருது...ஜனங்க ஜாக்கிரதை’ பாடல் வெளியான சற்று நேரத்திலேயே இணையதள வாசிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

More News >>