நடந்து சென்று வாக்கு சேகரித்த மு.க.ஸ்டாலின் - வியாபாரிகள், பயணிகளிடம் ஆதரவு திரட்டினார்

ஓசூர் நகரில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நடந்து சென்றபடி மார்க்கெட், பேருந்து நிலைய பகுதிகளில் பொதுமக்கள்,வியாபாரிகளிடம் வாக்கு சேகரித்தார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு முடிந்தவுடன், கடந்த 10 நாட்களாக தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். தினமும் இரவில் தங்கும் நகரங்களில் அதிகாலையில் எழுந்தவுடன் நடைப்பயிற்சிக்கு செல்லும் போது வாக்கு சேகரிப்பதையும் வாடிக்கையாகக் கொண்டுள்ளார். பளிச்சென்ற டி-சர்ட், சூட்டில் சம்பந்தப்பட்ட தொகுதி வேட்பாளர்களுடன் நடைப்பயிற்சி செல்லும் ஸ்டாலின் கண்ணில் படுவோர்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபடுவது பொது மக்களிடம் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

இன்று காலை ஓசூர் நகருக்கு வந்த மு.க.ஸ்டாலின், பளிச்சென்ற வெள்ளை வேட்டி, சட்டையில் கறுப்பு கண்ணாடி அணிந்து நடந்து சென்ற படி வாக்கு சேகரித்தார். உடன் ஓசூர் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சத்யா, கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் டாக்டர் செல்லக்குமார் ஆகியோரையும் உடன் அழைத்துச் சென்று மக்களிடம் கை குலுக்கியும், வணங்கியபடியும் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்தார்.

More News >>