தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழி நாசரேத் பகுதியில் பிரச்சாரம் - மலர் தூவி உற்சாக வரவேற்பு

தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் கனிமொழி, இன்று ஆழ்வார் திருநகரி ஒன்றியத்திற்குப்பட்ட நாசரேத், மூக்குப்பேரி உள்ளிட்ட ஊர்களில் பிரச்சாரம் செய்தார். அப்போது அவருக்கு மலர் தூவியும், ஆரத்தி எடுத்தும் பொதுமக்களும், திமுக மற்றும் கூட்டணிக் கட்சி தொண்டர்களும் உற்சாக வரவேற்பளித்தனர்.

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் அக்கட்சியின் மகளிரணிச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அதிமுக கூட்டணியில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் போட்டியிடுவதால் தூத்துக்குடி தொகுதி நட்சத்திர அந்தஸ்து தொகுதியாகியுள்ளது.

திமுக சார்பில் போட்டியிடும் கனிமொழி, கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தூத்துக்குடி தொகுதியில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். இன்று காலை ஆழ்வார்திருநகரி ஒன்றியத்திற்கு உட்பட்ட நாசரேத், மூக்குப்பேரி உள்ளிட்ட பல பகுதிகளில் கனிமொழி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். மூக்குப்பேரியில் திறந்த வேனில் பிரச்சாரத்திற்கு வந்த கனிமொழிக்கு திமுக ஊராட்சி செயலாளர் கலையரசு தலைமையில் பொது மக்களும், திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தொண்டர்களும் மலர் தூவியும், ஆரத்தி எடுத்தும் உற்சாக வரவேற்பளித்தனர்.

 

More News >>