இதயங்களை வென்ற காவலர்.. கனமழையிலும் அயராத பணி!

அஸ்ஸாம் மாநிலத்தில் கொட்டும் மழையில் பணியில் ஈடுபட்ட போக்குவரத்து காவலர் மிதுன் பொதுமக்களின் இதயங்களை வென்றுள்ளார். கவுகாத்தியில் போக்குவரத்து காவலர் மிதுன் தாஸ் வழக்கமான பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது திடீரென கனமழை கொட்டியது. ஆனால் மழையை தடையாக நினைக்காமல் நனைந்தபடி அவர் பணியில் ஈடுபட்டார். இதனை வாகனத்தில் சென்றவர்கள் வீடியோ பதிவு எடுத்து வலைத்தளங்களில் வெளியிட்டனர். ராணுவ வீரன் போல் மிடுக்காக பணியாற்றிய மிதுன் தாஸின் வீடியோ இணையத்தில் வைரலானதால் சக ஊழியர்களின் பாராட்டுதலையும் அவர் பெற்றார்.

அதேநேரத்தில் மழை வெயில் போன்றவற்றால் காவலர்களுக்கு சிரமம் ஏற்படாமல் இருக்க நிழற் குடை போன்ற அமைப்பை ஏற்படுத்திதர வேண்டும் என பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

More News >>