வாழ்வில் மிகவும் மகிழ்ச்சியான தருணம் உயர்ந்த மனிதன் குறித்து பேசும் எஸ்ஜெ.சூர்யா

அமிதாப் பச்சன் நடிப்பில் வெளிவர உள்ள  'உயர்ந்த மனிதன்' படம் குறித்து எஸ்.ஜெ.சூர்யா கருத்து தெரிவித்துள்ளார்.

பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஆக இந்நாள்வரை நடிகர் அமிதாப் பச்சன் வலம் வருகிறார். 60 வருடத் திரை உலகில் பல மொழிப் படங்களில் நடித்துள்ள அமிதாப், ஏனோ தமிழ் படங்களில் நடிக்கவில்லை. ஆனால், தற்போது அந்த குறையும் நிவர்த்தியாகிவிட்டது.

திருச்செந்தூர் முருகன் புரொடக்‌ஷன் சார்பில் சுரேஷ் கண்ணன் மற்றும்  ஃபைவ் எலிமெண்ட்ஸ் பிக்சர்ஸ் இணைந்து ‘உயர்ந்த மனிதன்’ படத்தை தயாரிக்கிறார்கள். இந்த படத்தின் பட்ட பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கடந்த 2006ல் வெளியான கள்வனின் காதலி படத்தை இயக்கிய தமிழ்வாணன் இந்தப் படத்தை இயக்குகிறார்.  

ஹிந்தி, தமிழ் ஆகிய மொழிகளில் உருவாகும் ‘உயர்ந்த மனிதன்’ படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் எஸ்.ஜெ.சூர்யா. இந்த படம் குறித்து பேசியுள்ள அவர், ‘எனது வாழ்வில் மிகவும் மகிழ்ச்சியான தருணம் இது. எனது கனவை நிறைவேற்றிய கடவுளுக்கும், எனது பெற்றோருக்கும், மேலும் எவர்கிரீன் சூப்பர்ஸ்டார் அமிதாப்பச்சனுக்கும் நன்றி. அதோடு, இந்த மகிழ்ச்சியான தருணத்தை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாசுடன் பகிர்ந்து கொள்கிறேன் என ட்வீட் செய்திருக்கிறார். 

 

More News >>