5ஜி தொழில்நுட்பத்தால் முட்டையை போல் வேகப்போகும் மனித இனம் - எச்சரிக்கும் ஆய்வாளர்கள்

'அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்று முன்னர் சொன்னது பொய்யல்ல'. நவீன தொழில்நுட்ப பயன்களும் இதற்கு விதி விலக்கு. மைக்ரோவேவ் அடுப்புகளில் எப்படி உணவு சமைக்கப்படுகிறதென்று எவரேனும் சிந்தித்ததுண்டா?. மைக்ரோவாவ் தொழில்நுட்பத்தில் உணவு சீக்கிரமாக சமைக்க உதவுவது கதிர்வீச்சு அலைகள் தான். இதே கதிர் வீச்சுதான் 4ஜி மற்றும் 5ஜி தொழில்நுட்பத்தில் பயன்படுத்தப்படுகிறது. மைக்ரோவேவ் அடுப்பில் ஒரு முட்டையை வைத்தால், 30 நொடியில் முட்டை வெந்து வெடித்துவிடும். மைக்ரோவேவ் அலை வீச்சின் சக்தி அத்தகையது. அதேபோல் தற்பொழுது பூமிக்கும் இதே நிலை தான் என்பதே உண்மை.

5ஜி தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தப் பல முன்னணி நிறுவனங்கள் போட்டிபோட்டுக் கொண்டிருக்கின்றனர். 5ஜி தொழில்நுட்பத்தினால் பல நன்மைகள் ஏற்பட்ட போதிலும், நமது அடிப்படை வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று திடுக்கிடும் உண்மைகள் கூறப்படுகின்றன. 5ஜி தொழில்நுட்பம் வெற்றிகரமாகக் களமிறக்க, பூமியைச் சுற்றி பூமியின் சுற்றுப்பாதையில் சுமார் 20,000 சாட்டிலைட்கள் அமைக்கப்பட வேண்டும். இந்த 20,000 சாட்டிலைட்களும் பூமியை நோக்கி மைக்ரோவேவ் சிக்னலை தாக்க போகிறது. இந்த மைக்ரோவேவ் சிக்னல்கள் பூமியைத் தாக்குவதுமட்டுமின்றி, பூமியின் இயல்பு நிலையையும் மாற்றுகிறது.

உண்மையில் சொல்லப்போனால் மைக்ரோவேவ் சிக்னல்கலால் பூமி சூடடைந்து, பெருமளவிலான வானிலை மாற்றத்தைச் உருவாக்க போகிறது. அதுமட்டுமின்றி அதிகளவிலான இயற்கை சீற்றத்தை பூமி சந்திக்க நேரிடும். அதோடு சொல்லப்போனால் பூமியில் உள்ள அனைத்து வகையான ஜீவ ராசிகளும் அழியும் நிலைக்கு தள்ளப்படும். இப்படியான தொழில் நுட்பம் மனித குலத்திற்கு தேவைதானா? என்று ஒரு சில நிறுவனங்கள் இதை எதிர்த்து போராடி வருகின்றனர். இந்த தொழில்நுட்பம் மட்டும் சாத்தியமானால், மைக்ரோவேவ் அடுப்பில் வைத்த முட்டை எப்படி வெந்து வெடித்துவிடுமோ, அதே நிலை தான் பூமியில் உள்ள அனைத்து ஜீவ ராசிகளுக்கும். மனித இனத்தினை அளிக்க, மனிதனே தொழில் நுட்பத்தை கண்டுபிடிப்பது பெரும் கவலையை அளிக்கிறது" என உலக ஆய்வாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

More News >>