எவ்வளவு பெரிய சக்திகளாக இருந்தாலும் கூடவே நம்பிக்கை துரோகிகளும் இருக்கிறார்கள் இதை கவனித்து செயல்பட வேண்டும் என வேலூர் பாராளுமன்ற திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பேச்சு

வேலூர் மாவட்டம் குடியாத்தம் புதிய பேருந்து நிலையத்தில் வேலூர் பாராளுமன்றம் மற்றும் குடியாத்தம் சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான திமுக கூட்டணி கட்சியின் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது விழாவில் கலந்து கொண்டு பேசிய திமுக பொருளாளர் துரைமுருகன் அவர்களின் மகனும் வேலூர் பாராளுமன்ற வேட்பாளருமான கதிர் ஆனந்த் அவர்கள்.

உதய சூரியனை வெற்றிபெற செய்ய வேண்டுமானால் முதலில் நமது மத்தியில் இருக்கக்கூடிய பிரிவினைகளை ஓரங்கட்டி வைக்க வேண்டும் நாம் எல்லோரும் ஒரு அணி கூட்டு அணியினருக்கும் சொல்கிறேன் திமுகவினருக்கும் சொல்கிறேன் நாம் எல்லோரும் இணைந்து தான் இந்த தேர்தலை சந்திக்கிறோம் நாம் எல்லோரும் ஓரணியில் நிற்கிறோம் காரணம் எவ்வளவு பெரிய சக்திகளாக இருந்தாலும் கூடவே நம்பிக்கை துரோகி களும் இருக்கிறார்கள் அது மட்டும் இல்லை கூட இருந்து குழி பறிக்கும் வல்லுநர்களும் இருக்கின்றனர்.

ஆகையால் இந்த சக்திகள் எல்லாம் முறியடிக்க வேண்டும் ஆனால் நாம் தேர்தலில் ஒற்றுமையாக இருந்து ஒரே இலக்கான மக்கள் செல்வாக்கைப் பெற்று மக்களிடம் வாக்குகளை பெற்று உதயசூரியன் சின்னத்தில் என்னை வெற்றி பெற செய்ய வேண்டும் இது நமது ஒற்றுமைக்கு கொடுக்கப்பட்டிருக்கிற சவால் எத்தனை இன்னல்கள் வந்தாலும் நமது கதாநாயகனாக இருக்கக்கூடிய நமது தேர்தல் அறிக்கை மக்களுக்கு கொடுக்கக்கூடிய வாக்குறுதிகள் இந்த வாக்கு ஒளி வாக்குறுதிகளை மக்களுக்கு சேர்க்கக்கூடாது என்று எத்தனை தடங்கள் விதித்தாலும் அதைப் பற்றியெல்லாம் கவலைப்பட தேவையில்லை ஏனென்றால் தலைவர் தளபதி அவர்களும் பொருளாளர் அவர்களும் நமக்கு கற்றுக் கொடுத்தது என்னவென்றால் உழைப்பு உழைப்பு உழைப்பு என்ன இன்னல்கள் வந்தாலும் பிரச்சனைகளை சமாளிக்க வேண்டும் என வேலூர் பாராளுமன்ற வேட்பாளரும் திமுக பொருளாளர் துரைமுருகன் அவர்களின் மகன் மகனுமான கதிர் ஆனந்த் அவர்கள் பேச்சு

More News >>