பாலிவுட்டில் படமாகும் உலகக்கோப்பை 1983.. அதிக ரன்கள் குவித்த வீரரின் வேடத்தில் நம்ம ஜீவா

இந்திய கிரிக்கெட் அணி 1983 உலகக்கோப்பை வென்ற நிகழ்வு ஹிந்திப் படமாக உருவாகவுள்ளது. 83 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் கபில் தேவின் மகள் உதவி இயக்குநராகப் பணிப்புரிகிறார் என்பது கூடுதல் சிறப்பு. காரணம் கபில்தேவ் தலைமையில் தான் இந்திய அணி எப்படி கோப்பையை வென்றது. இந்தப் படத்தில் கபில் தேவ் வேடத்தில் ரன்வீர் சிங் நடிக்கிறார்.

இதி இன்னொரு சர்ப்ரைஸ் இருக்கிறது. 1983 உலகக் கோப்பை போட்டியில் தமிழக வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் அதிக ரன்கள் குவித்தார். அந்த வேடத்தில் நடிக்கப் போவது நம் தமிழ் நடிகர் ஜீவா. இதனை இன்ஸ்டாகிராமில் முன்னரே தெரிவித்துவிட்டார் ஜீவா. தற்போது இந்தப் படத்தில் இந்திய அணியாகக் கலமிறங்கும் நட்சத்திரங்கள் படத்துக்காகக் கிரிக்கெட் பயிற்சியைப் பஞ்சாப் மாநிலம் தரம்சாலாவில் மேற்கொண்டு வருகிறது.

மேலும் 1983 உலகக்கோப்பை நடைபெற்ற லண்டன் லார்ட்ஸ் மைதானத்திலேயே படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. 1983இல் நடந்த உலக கோப்பையில் மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்தி முதல் உலக கோப்பையை வென்றது மிகவும் நெகிழ்வான தருணம். உணர்ச்சிப்பூர்வமானதும் கூட. எனவே இந்தப் படம் அதிக எதிர்பார்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாகிறது.

More News >>