`ஒன்றரை வருடமாக செக்ஸ் தொல்லை ஆசைக்கு இணங்கினால் பதவி - என்.டி.ஆரின் மனைவி மீது புகார் கொடுத்த நடிகர்

ஆந்திர முன்னாள் முதல்வர் என்.டி.ஆரின் இரண்டாவது மனைவி லட்சுமி பார்வதி தனக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு தருவதாக நடிகர் ஒருவரை புகார் அளித்துள்ளார்.

ஆந்திர முன்னாள் முதல்வர் என்.டி.ஆர் தனது முதல் மனைவி மறைவுக்கு பிறகு இரண்டாவதாக லட்சுமி பார்வதி என்பவரை திருமணம் செய்துகொண்டார். பின்னர் என்.டி.ஆர் மறைந்த பின்னர் சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக என்.டி.ஆர் தெலுங்கு தேசம் என்ற கட்சியை லட்சுமி பார்வதி நடத்தி வந்தார். சிறிது காலம் இந்தக் கட்சியை நடத்தி வந்தவர் தற்போது ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் இணைந்து பணியாற்றி வருகிறார். சமீபத்தில் இவரது வாழ்க்கை சரித்திரம் ``லட்சுமியின் என்.டி.ஆர்" என்ற பெயரில் திரைப்படமாக வெளிவந்தது. இதனை சர்ச்சைக்குரிய இயக்குநர் ராம்கோபால் வர்மா இயக்கியிருந்தார். இந்தநிலையில் மனைவி லட்சுமி பார்வதி தனக்கு செக்ஸ் தொல்லை தருவதாக தருவதாக நடிகர் ஒருவரை புகார் அளித்துள்ளார்.

ஆனந்த் பால் என்னும் அந்த நடிகர் இது தொடர்பாக போலீஸ் ஸ்டேஷனில் அளித்துள்ள புகாரில், ``கடந்த நான்கு வருடங்களாக எனக்கு லட்சுமி பார்வதியை தெரியும். அவரது குடும்பத்தினருடன் நெருக்கமாக பழகி வந்தேன். இதற்கிடையே கடந்த ஒன்றை வருடமாக லட்சுமி பார்வதி என்னை காதலிப்பதாக ‘வாட்ஸ் அப்’ மூலம் மெசேஜ் அனுப்பி வருகிறார். மேலும் ஆபாச படங்களையும் அனுப்பி வருகிறார். பாலியல் தொல்லையும் கொடுத்து வருகிறார். அவரின் ஆசைக்கு இணங்கினால் ஜெகன் மோகன் ரெட்டியிடம் சொல்லி கட்சியில் பெரிய பதவி பெற்றுத்தருவதாக கூறி தொல்லை கொடுக்கிறார். இல்லை என்றால் நிறைய விளைவுகளை சந்திக்க வேண்டி வரும் என மிரட்டல் விடுத்து வருகிறார். இவரால் எனது குடும்பத்தில் பிரச்னை வெடித்துள்ளது.

அவரை என் அம்மா போல் நினைத்தேன். ஆனால் எனக்கு அவர் செக்ஸ் தொல்லை கொடுப்பதுடன், ஆபாசமாக வீடியோ அனுப்பி வருகிறார். எனக்கும், என் குடும்பத்தாருக்கும் போலீஸ் பாதுகாப்பு தர வேண்டும். பாலியல் தொல்லை செய்ததற்காக லட்சுமி பார்வதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கூறி வாட்ஸ் அப் ஆதாரங்களை போலீசிடம் ஒப்படைத்துள்ளார். இந்தப் புகாரின் பேரில் லட்சுமி பார்வதி மீது போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர். ஆந்திர சட்டசபைக்கும், நாடாளுமன்றத்துக்கும் ஒரே கட்டமாக 11-ந்தேதி தேர்தல் நடக்க உள்ள நிலையில் லட்சுமி பார்வதி மீதான இந்த செக்ஸ் புகார், அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More News >>