பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அலுவலத்தில் திடீர் தீ விபத்து

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அலுவலகத்தில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டதாக அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தீ விபத்தின் போது பிரதமர் இம்ரான் கான் அலுவலகத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபத்தில் உள்ள பாகிஸ்தான் பிரதமர் அலுவலகத்தின் 6வது தளத்தில் இன்று மின் கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டுள்ளது. அதற்கு ஒரு மாடி கீழே 5வது தளத்தில் பிரதமர் அலுவலகம் இருந்ததால், பரபரப்பு அதிகரித்தது.

அலுவலகத்தில் இருந்த ஊழியர்கள் முதலில் பாதுகாப்பாக வெளியேறும் படி பிரதமர் இம்ரான் கான் கூறியதாகவும் அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விபத்து நடந்த நேரத்தில், அமெரிக்க அதிகாரி ஜெனரல் கென்னத் எஃப். மெக்கன்ஸியுடன் உரையாடிக் கொண்டிருந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

பிரதமர் அலுவலகம் என்பதால், மின் கோளாறை உடனடியாக சரிபார்க்கும் பணி அங்கு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

More News >>