எங்க தேர்தல் அறிக்கைகள் ஹீரோ, பா.ஜ. தேர்தல் அறிக்கை ஜீரோ- மு.க.ஸ்டாலின்....

தி.மு.க., காங்கிரஸ் தேர்தல் அறிக்கைகள் ஹீரோ, பா.ஜ. தேர்தல் அறிக்கை ஜீரோ என்று தி.மு.க.தலைவர் ஸ்டாலின் பேசினார்.

தமிழகத்தில் வரும் 18ம் தேதி மக்களவை மற்றும் 18 சட்டப்பேரவைகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகள் பம்பரமாக சுற்றி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் வசந்த குமார் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அ.தி.மு.க. கூட்டணி சார்பில் பா.ஜ.வின் பொன். ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார்.

தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலின் கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வசந்த குமாருக்கு ஆதரவாக அந்த தொகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் மக்கள் மத்தியில் பேசியதாவது: தி.மு.க. தேர்தல் அறிக்கை ஹீரோ என்றால் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை சூப்பர் ஹீரோ, ஆனால் பா.ஜ. தேர்தல்அறிக்கை ஜீரோ.

கடந்த முறை இந்த தொகுதியில் வெற்றி பெற்ற கொடுத்த வாக்குறுதிகளை பொன். ராதாகிருஷ்ணன் நிறைவேற்றினாரா? நாகர்கோவில் நகரில் சுற்றுச்சாலை அமைப்பேன். கன்னியாகுமரியில் புதிய ரயில்வே கோட்டம் அமைப்பேன். மீனவர்களை கண்டுபிடிக்க ஹெலிகாப்டர் தளம் அமைப்பேன் போன்ற வாக்குறுதிகளை பொன். ராதா கிருஷ்ணன் நிறைவேற்றினாரா? என்று ஆவேசமாக கேள்விகளை எழுப்பினார்.

 

அடேங்கப்பா... எவ்ளோ பெரிய நம்பிக்கை... பாஜக கூட்டணி தமிழகத்தில் 30 தொகுதிகளில் வெல்லுமாம்... பொன். ராதாகிருஷ்ணன்

More News >>