ஆந்திரா சிவக்குமார் இவருதாங்க! செல்பி எடுத்த தொண்டரை புரட்டி எடுத்த நடிகர் பாலகிருஷ்ணா...

ஆந்திராவில் தன்னை செல்பி எடுத்த தொண்டரை நடிகரும், எம்.எல்.ஏ.வுமான பாலகிருஷ்ணா அடித்து துவைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மக்களால் இன்றும் கிருஷ்ணராக கொண்டாடப்படும் என்.டி. ராமராவின் மகன்களில் ஒருவர் பால கிருஷ்ணா. இவரும் பிரபல நடிகரும்தான். மேலும் இந்துப்புரம் சட்டப்பேரவை தொகுதி தெலுங்கு தேச எம்.எல்.ஏ.வாகவும் இருந்து வருகிறார். ஆந்திராவில் மக்களவை தேர்தலோடு அம்மாநில சட்டப்பேரவைக்கும் சேர்த்து தேர்தல் நடைபெற உள்ளது. நடிகர் பாலகிருஷ்ணா இந்த முறையும் இந்துப்புரம் சட்டப்பேரவை தொகுதியில்தான் போட்டியிடுகிறார். இந்நிலையில் ஆந்திராவின் சீப்புருபல்லியில் தெலுங்கு தேச கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் செய்தார்.

அப்போது தெலுங்கு தேச கட்சி தொண்டர் ஒருவர் பாலகிருஷ்ணாவுடன் செல்பி எடுக்க முயன்றார். இதனால் கடுப்பான பாலகிருஷ்ணா அந்த தொண்டருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின் திடீரென வேனில் இருந்து கீழே இறங்கிய பாலகிருஷ்ணா அந்த நபரிடமிருந்து கேமராவை அடிக்க முயன்று அவரை அடித்து உதைத்தார். தற்போது இந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாலகிருஷ்ணா இது போன்று நடப்பது முதல் முறையல்ல. ஏற்கனவே பல முறை இது போன்ற சம்பவங்கள் நடந்துள்ளது. இன்டர்நெட்டில் பாலகிருஷ்ணாவை ஆந்திரா சிவக்குமார் என்று கலாய்த்து வருகின்றனர்.

 

ராகுல் காந்தி வேணாம்..! சந்திரபாபு நாயுடு பிரதமராகணும்..!! தேவகவுடா பல்டி

More News >>