ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி தி.மு.க. ஆட்சிதான்- எடப்பாடி பழனிசாமி தாக்கு....

இந்தியாவில் ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி தி.மு.க. ஆட்சிதான் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி என்று தி.மு.க. வை கடுமையாக தாக்கி பேசினார்.

தமிழகத்தில் வரும் 18ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் அரசியல் களம் அதிருகிறது. முக்கிய தலைவர்கள் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மேட்டுப்பாளையத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நீலகிரி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் தியாகராஜனை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசியதாவது: இந்தியாவிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி தி.மு.க. ஆட்சிதான். எம்.ஜி.ஆருக்கும், ஜெயலலிதாவுக்கும் தி.மு.க.வினர் ஏராளமான தொந்தரவுகளை கொடுத்தனர். தி.மு.க.வின் அராஜகத்தை தாண்டித்தான் முதல்வர் ஜெயலலிதா அ.தி.மு.க.வையும், ஆட்சியையும் நடத்தினார். ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு தி.மு.க.வை அழிக்க ஸ்டாலின் சதிவேலைகளை முறியடித்து அ.தி.மு.க. ஆட்சியை தக்கவைத்தது. இரட்டை இலை சின்ன வழக்கிலும் அ.தி.மு.க. வெற்றி பெற்றது. இவ்வாறு அவர் கூறினார்.

 

எந்தெந்த தொகுதிகளில் யாருக்கு வெற்றி வாய்ப்பு....லயோலா முன்னாள் மாணவர்கள் கருத்துக்கணிப்பில் வெளியான தகவல்

More News >>