விக்னேஷ் சிவனுக்காக பல லட்சம் ரூபாய் செலவில் ரூம் போட்ட லைகா நிறுவனம்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கவிருக்கும் படத்தின் படப்பிடிப்பு நாளை தொடங்குகிறது.

பேட்ட படத்தைத் தொடர்ந்து ரஜினி நடிக்கவிருக்கும் ‘ரஜினி 166’ படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவிருக்கிறார். இந்த படத்துக்கு `தர்பார்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு நாளை முதல் மும்பையில் படமாக்க இருக்கிறார்கள். இப்படப்பிடிப்பில் ரஜினி, நயன்தாரா, யோகி பாபு உள்ளிட்டோர் கலந்துகொள்ளவிருக்கிறார்கள். 1 மாதம் தொடர்ந்து படப்பிடிப்பு நடக்க இருக்கிறது.

லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்புக்காக இன்று மும்பை செல்லவிருக்கிறார் நயன்தாரா. இது ஒருபக்கம் இருக்க, சிவகார்த்திகேயன் நடிப்பில் விக்னேஷ்சிவன் இயக்கவிருக்கும் படத்தையும் லைகா நிறுவனம் தான் தயாரிக்கிறது. நயன்தாரா படப்பிடிப்புக்காக மும்பை செல்லவிருப்பதால், விக்னேஷ் சிவனும் படப்பிடிப்பு தொடர்பான விவாதத்துக்காக மும்பை செல்லவேண்டும் என லைகா நிறுவனத்திடம் மும்பையில் தங்க வசதி செய்து தருமாறு கேட்டிருக்கிறார்.

இயக்குநர் கேட்டால் மறுக்கவா முடியும் என்பதால், விக்னேஷ் சிவனுக்கு பல லட்ச செலவில் தங்கும் வசதி செய்து கொடுத்திருக்கிறது தயாரிப்பு தரப்பான லைகா. நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் ஜாலியாக இருக்க கம்பெனி காசை செலவு செய்கிறார்களே என்று வருத்தத்தில் இருக்கிறதாம் லைகா நிறுவனம்.

 

நம்ம லேடி சூப்பர் ஸ்டாருக்கு பொன்னியின் செல்வன் படத்தில் என்ன ரோல் தெரியுமா

More News >>