ஆதின மடங்களின் சொத்துக்கள் எவ்வளவு? - தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் உள்ள அனைத்து ஆதினங்களின் சொத்து விபரங்களை தாக்கல் செய்ய உயர்நீதி மன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி செங்கோல் ஆதின மடத்திற்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் அதை அளவிட உத்தரவிடக்கோரி சென்னையைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

மேலும் தமிழகம் முழுவதும் உள்ள மடங்களில் இதே நிலைதான் உள்ளது என்று அவர் தனது மனுவில் தெரிவித்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், தாரண் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது ஆதின மடங்களின் சொத்துக்களை இந்து சமய அறநிலையத் துறை கடைசியாக எப்போது தணிக்கை செய்தது என்று கேள்வி எழுப்பினார். சொத்து ஆவணங்களை பதிவுத்துறை சரிபார்த்து உறுதி செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் கூறினர். பின்னர் வழக்கு விசாரணையை மீண்டும் பிப்ரவரி 20ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

More News >>