சிம்புவுக்குப் பிறகு அஜித்தா? வெங்கட் பிரபு ஐடியா

இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கத்திலும் தயாரிப்பிலும் இரண்டு படங்கள் வெளியாக தயாராகியுள்ளது. தொடர்ந்து இரண்டு பெரிய நடிகர்களை இயக்கவும் தயாராகிவருகிறார்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் சத்யராஜ், ஜெயராம், ஜெய், ஷாம், சிவா, சந்திரன், நாசர், சுரேஷ், சம்பத் ராஜ், ரம்யா கிருஷ்ணன், ரெஜினா, சஞ்சிதா ஷெட்டி, நிவேதா பெத்துராஜ் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்க, உருவாகியிருக்கும் படம் பார்ட்டி. இறுதி கட்ட பணிகளில் இருக்கும் இப்படத்தை வெளியிடுவதற்கான

பணிகள் தற்பொழுது நடந்துவருகிறது. தவிர, வெங்கட்பிரபு தயாரிப்பில் வைபவ் நடித்திருக்கும்  ஆர்.கே.நகர் படம் வருகிற 12ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

இவ்விரண்டு படங்களுக்குமே பிரேம்ஜி அமரன் இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருக்கும் மாநாடு படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்க இருக்கிறது. படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க இருக்கிறார். சிம்பு படத்தைத் தொடர்ந்து அஜித்தை இயக்குவதற்கான பேச்சுவார்த்தையில் இருக்கிறார் வெங்கட்பிரபு. ஏற்கெனவே அஜித்தை வைத்து மங்காத்தா படத்தை இயக்கினர். மீண்டும் அந்த கூட்டணி இணையுமா என்பது இன்னும் சில மாதங்களில் முடிவாகிவிடும்.

More News >>