மோதிரத்தை உருவிய தொண்டரால் ஜெர்க்கான நடிகர் கார்த்திக்....

தேனி மக்களவை தொகுதியில் பிரசாரம் செய்த போது தன் விரலில் மாட்டியிருந்த மோதிரத்தை தொண்டர் ஒருவர் உருவியதால் நடிகர் கார்த்திக் ஷாக் ஆனார்.நடிகர் கார்த்திக் மனித உரிமைகள் காக்கும் கட்சியை நடத்தி வருகிறார். தமிழகத்தில் மக்களவை மற்றும் 18 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் இம்மாதம் 18ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தல்களில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக நடிகர் கார்த்திக் பிரசாரம் செய்து வருகிறார்.

தேனி மக்களவை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ரவீந்திரநாத் குமாரை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக நடிகர் கார்த்திக் தேனி மாவட்டத்துக்கு வந்தார். தேவாரத்தில் தேவர் சிலை அருகே அவர் பிரசாரம் செய்தார். கார்த்திக்கிற்கு பிரசார ஜீப் வழங்கபடாததால் வேனில் அமர்ந்தபடியே பிரசாரம் செய்தார். அந்த பகுதியில் அ.தி.மு.க. தொண்டர்கள் குழுமி இருந்தனர்.

வேனின் கண்ணாடியை இறக்கி விட்டு தொண்டர்களுக்கு கார்த்திக் கை கொடுத்தார். அப்போது ஒரு தொண்டர் கை கொடுக்கும் சாக்கில் நைசாக கார்த்திக் விரலில் மாட்டியிருந்த மோதிரத்தை உருவி விட்டார். இதனால் பதறி போன கார்த்திக் தன் மோதிரத்தை திருப்பி தாங்கய்யா என அலறினார். இதனையடுத்து சிலர் மோதிரத்தை உருவி நபரிடம் இருந்து மோதிரத்தை வாங்கி கார்த்திக்கிடம் கொடுத்தனர். அதன் பிறகுதான் கார்த்திக் முகத்தில் நிம்மதி தெரிந்தது.

More News >>