கணவருடன் சென்று வாக்களித்த சமந்தா!

தனது கணவரும் தெலுங்கு நடிகருமான நாகசைத்தன்யாவுடன் நடிகை சமந்தா, தெலங்கானாவில் உள்ள வாக்குச்சாவடிக்கு சென்று தனது வாக்கினை செலுத்தினார்.

சூப்பர் டீலக்ஸ் படத்தில் வேம்பு எனும் வித்தியாசமான கேரக்டரில் படுபோல்டாக நடித்த சமந்தாவுக்கு, முதன்முறையாக நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் இருந்து பாராட்டுக்கள் குவிந்தன.

நாட்டில் உள்ள 20 மாநிலங்களில் இன்று முதல் கட்ட மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருவதால், ஐதராபாத்தில் உள்ள கச்சி பவுலி தொகுதியில் உள்ள நானாகிரம்குடா வாக்குச்சாவடிக்கு தனது கணவர் மற்றும் நடிகருமான நாகசைத்தன்யாவுடன் சென்ற சமந்தா, தனது ஜனநாயக கடமையான வாக்கினை செலுத்தினார்.

மேலும், முதல்முறை வாக்காளர்கள் தங்களது கடமையை தவறாது செய்ய வேண்டும் என கோரிக்கையும் விடுத்தார்.

முன்னதாக பாகுபலி இயக்குநர் ராஜமெளலி தனது வாக்கினை செலுத்தி விட்டதாகவும், நாட்டு மக்கள் அனைவரும் தவறாது வாக்களிக்க வேண்டும் என்றும், உங்களுக்கு வேட்பாளர்கள் யாரையும் பிடிக்கவில்லை என்றால், இருக்கவே இருக்கிறது நோட்டா என்றும் தனது ட்விட்டரில் தெரிவித்தார்.

More News >>