சென்னை, நாமக்கல், நெல்லையில் வருமான அதிகாரிகள் ரெய்டு!

அ.தி.மு.க., தி.மு.க., அ.ம.மு.க. கட்சியினர், வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக பல்வேறு வழிகளில் பணத்தை கொடு சென்று வருகின்றனர். இந்த கணக்கில் வராத பண நடமாட்டத்தைக் கண்டுபிடித்து பறிமுதல் செய்வதில் தேர்தல் கமிஷன் முனைப்பாக உள்ளது. இந்நிலையில், பிரபல கட்டுமான நிறுவனமான பி.எஸ்.கே. இன்ஜினியரிங் கம்பெனிக்கு சொந்தமான சென்னை மற்றும் நாமக்கல்லில் 4 இடங்களில் வருமானவரித் துறையினர் அதிரடி ரெய்டு நடத்தினர்.

மேலும் பைனான்சியர் சிலரின் வீடுகளிலும் ரெய்டு நடத்தப்பட்டிருக்கிறது. இந்த ரெய்டுகளில் பல ஆவணங்களும், பணமும் கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது.

இதே போல், சென்னை மற்றும் நெல்லையில் 2 பேரின் வீடு மற்றும் அலுவலகங்களிலும் ரெய்டு நடத்தப்பட்டுள்ளது. வாக்காளர்களுக்கு கொடுப்பதற்கான பணம் இங்கு பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வந்த தகவலை அடுத்து ரெய்டு நடத்தப்பட்டிருக்கிறது. 

More News >>