சிவகங்கையில் வித்தியாசமான முறையில் பிரசாரம் செய்து அசத்திய சினேகன்

சிவகங்கை மக்களவை தொகுதியில் மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர் சினேகன் வித்தியாசமான முறையில் பிரசாரம் செய்து வாக்காளர்களை கவர்ந்து வருகிறார்.தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் வியாழக்கிழமை நடைபெற உள்ளது. அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்களும், கட்சி தலைவர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சிவகங்கை மக்களவை தொகுதியிலும் தேர்தல் திருவிழா படுஜோராக நடந்து வருகிறது. சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக கார்த்தி சிதம்பரம் போட்டியிடுகிறார். பா.ஜ. வேட்பாளராக எச்.ராஜா களம் இறங்கி உள்ளார். நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளராக திரைப்பட பாடலாசிரியர் சினேகன் போட்டியிடுகிறார்.

இதனால் சிவகங்கை மக்களவை தொகுதி நட்சத்திர தொகுதியாக மாறி விட்டது.மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் சினேகன் வித்தியாசமான முறையில் பிரசாரம் செய்து வாக்காளர்களை கவர்ந்து வருகிறார். தேர்தலுக்காக அழைப்பிதழை அச்சிட்ட சினேகன், மத்தளம், நாதஸ்வரம் வாத்தியங்கள் முழங்க, வெற்றிலை பாக்கு வைத்து வாக்காளர்களிடம் அரசியல் மாற்றத்துக்கான அழைப்பிதழ் என்று அந்த பத்திரிகையை வழங்கினார். சினேகனின் இந்த வித்தியாசமான அணுகுமுறை வாக்காளர்களை பெரிதும் கவர்ந்தது.

More News >>