வைரமுத்துவை பார்த்தால்...பளார் என கன்னத்தில் அறைவேன்! -சின்மயி

'கவிஞர் வைரமுத்துவை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் அவரது கன்னத்தில் அறை கொடுப்பேன்' என பாடகி சின்மயி தெரிவித்துள்ளார்.

கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி பகிரங்கமாக பாலியல் புகார் செய்தது, தமிழ் திரை உலகம் மட்டுமல்லாமல் ரசிகர்கள் மத்தியிலும் ஆதிர்ச்சியை ஏற்படுத்தியது. ட்விட்டரில் ‘மீ டூ’ (#metoo) மூலம் சின்மயி பாலியல் புகாரை தெரிவித்த பிறகுதான் ‘மீ டு’ என்கிற ஒன்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பது பலருக்கும் தெரியவந்தது. இதனையடுத்து, திரைத்துறை நடிகைகள் ‘மீ டு’ வாயிலாக தங்களுக்கு நிகழ்ந்த பாலியல் தொல்லைகள் குறித்து பொது வழியில் பேச ஆரம்பித்தனர்.

இதையடுத்து, பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள், பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் பற்றிதான தற்போது சின்மயி ட்விட்டரில் தொடர்ந்து பேசி வருகிறார். இந்நிலையில், பிரசாரத்தின் போது, தன்னிடம் தவறாக நடக்க முயன்ற ஒருவரை நடிகை குஷ்பு அனைவர் முன்னிலையிலும் 'பளார்' என கன்னத்தில் அறைந்தார்.

இது குறித்து சின்மயின் ட்விட்டர் பக்கத்தில் ஒருவர் கருத்து தெரிவித்திருந்தார். அவருக்கு பதிலளித்த சின்மயி, ‘அதுபோல தானும் வைரமுத்துவை மீண்டும் சந்தித்தால் அவரது கன்னத்தில் அறை கொடுப்பேன், அது தான் எனக்கு கிடைக்கும் ஒரே நியாயம், எனக்கு வயதும் தைரியமும் இப்போது உள்ளது’ என குறிப்பிட்டுள்ளார்.

More News >>