சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த கேப்டன்! 15ம் தேதி பிரசாரம்

தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்த் நாளை மறுநாள் ஒருநாள் மட்டும் தேர்தல் பிரசாரம் செய்வார் என தகவல் வெளியாகியுள்ளது.

உடல் நலக் குறைவால் அமெரிக்காவுக்கு சென்று சிகிச்சை பெற்று வந்த தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தற்போது வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். மக்களவை தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தல்களில் பிரசாரம் செய்ய  வருவார் என தொண்டர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் இதுவரை விஜயகாந்த் வரவில்லை. இதனால் அக்கட்சி தொண்டர்கள் மிகவும் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில் நேற்று சென்னை விமான நிலையத்தில் பிரேமலதா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது, விஜயகாந்த் நிச்சயமாக பிரசாரத்துக்கு வருவார். அவர் எப்போது வருவார் என்பது 2 நாளில் வெளியிடப்படும் என தெரிவித்தார். இந்த நிலையில் நாளை மறுநாள் ஒருநாள் மட்டும் விஜயகாந்த் பிரசாரம் செய்வார் என்று தகவல் வெளியாகியுள்ளது. வடசென்னை மக்களவை தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜை ஆதரித்து திங்கட்கிழமை தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த கேப்டன்! 15ம் தேதி பிரசாரம், தே.மு.தி.க., விஜயகாந்த், தேர்தல் பிரசாரம்

More News >>