பீகாரில் கோர விபத்து: ரயில் மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி

பாட்னா: பீகார் மாநிலத்தில் ரயில் மோதி 4 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பீகார் மாநிலம், சிவான் மாவட்டத்தில் உள்ள கச்சர் என்ற ரயில் நிலையம் அருகே, கோபால்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த குடும்பத்தினர் வந்துக் கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் ரயில் தூரத்தில் தானே வருகிறது என்று நினைத்து தண்டவாளத்தை கடக்க முயன்றனர். ஆனால், அதிவேகத்தில் வந்த ரயில் குடும்பத்தினர் மீது மோதியது.

இதில், நான்கு திசையில் சிதறிய குடும்பத்தை சேர்ந்த குழந்தை உள்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்த ஒருவரை மீட்டு உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இந்த விபத்து குறித்து ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

More News >>