பேச மறுத்த காதலியின் மூக்கை கடித்த காதலன்

ராஜஸ்தானில் தான் பேச மறுத்ததால் தன் மூக்கை கடித்து விட்டதாக தனது காதலன் மீது காதலி ஒருவர் புகார் கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் மாவட்டம் கேர்வாடா பகுதியை சேர்ந்த பெண்மணி மஞ்சு பர்மர், அவர் அதேபகுதியை சேர்ந்த இளைஞர் கேசவ்லால் என்பவரை காதலித்துள்ளார். இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் மஞ்சு பர்மர் தனது காதலனுக்கு தெரியாமல் சந்த்கேடாவில் வசிக்கும் தனது சகோதரி வீட்டுக்கு சென்றார். பின், அங்கேயே தங்கியபடி மஞ்சு கூலித்தொழில் செய்து வந்துள்ளார். கேசவ்லாலுடனான தொடர்பையும் நிறுத்தியுள்ளார்.

இந்நிலையில் தனது காதலி எங்கே போனார் என்பது குறித்து ஒரு தகவலும் தெரியாததால் கேசவ்லால் மிகவும் மனவருத்தத்தில் இருந்தார். இந்த சூழ்நிலையில், தனது காதலி மஞ்சு, சந்த்கேடாவில் இருப்பதை தன் நண்பன் வாயிலாக அறிந்தார் கேசவ் லால். கடந்த 8ம் தேதி அங்கு சென்றுள்ளார். ஆனால் அங்கு அவருக்கு கடும் அதிர்ச்சி காத்து இருந்தது.

நீண்ட நாள் தவிப்பு மற்றும் ஆசையுடன் வந்த தன்னுடன் மஞ்சு பேச மறுக்கவே, ஆத்திரமடைந்த கேசவ்லால் அவரது மூக்கை கடித்துள்ளார். படுகாயமடைந்த மஞ்சு காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீசார் எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர்.

More News >>