மூடர்கூடம் நவீன் திருமணம் பற்றி எழுந்த சர்ச்சைகள்.. உண்மை இதுதான்

மூடர்கூடம் படத்தின் மூலம் பலருக்கும் பரிட்சயமான இயக்குநர் நவீன். இவரின் சமீபத்திய ட்வீட் பலருக்கு குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பலரை கடுப்பேற்றியும் விட்டிருக்கிறது. அது குறித்த விளக்க செய்தி தொகுப்பே இந்த கட்டுரை.

இயக்குநர் நவீன் தற்பொழுது அலாவுதீனின் அற்புத கேமரா என்கிற படத்தை இயக்கி, நடித்துவருகிறார். படத்தில் நாயகியாக ஆனந்தி நடித்திருக்கிறார். இப்படம் நவீனுக்கு அடுத்து வெளியாக இருக்கிறது. இந்நிலையில் நவீன் சமீபத்தில் ட்விட்டரில் ஒரு ட்விட்டை தட்டினார். அது, “ எனக்கும் சிந்துவுக்கும் நடந்தது பதிவுத் திருமணம். நாங்கள் இருவரும் சாதிமத நம்பிக்கையற்ற பகுத்தறிவுப் பாதை நடப்பவர்கள் என்பதால்தான் காதல் பிறந்தது. என்றும் சிந்து சிந்துவாகவே இருப்பார். நாங்கள் மத எதிர்ப்பாளர்கள் இல்லை- மத மறுப்பாளர்கள், மனித சமத்துவத்தின் ஆதரவாளர்கள். #மனிதசமத்துவம் என்கிற ஹேஸ்டேக்குடன் ட்விட் போட்டிருந்தார்.இந்த ட்வீட்டை பார்த்த பலரும் நவீனுக்கு தற்பொழுது தான் திருமணம் முடிந்திருப்பதாகவும், நவீன் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் என்றும் செய்திகளை பரப்பிவந்தனர்.  இந்த ட்வீட்டை நவீன் போட காரணம் பி.ஜே..பி கட்சி தான். சமீபத்தில் நவீன் ஒரு தனியார் பத்திரிகையில் ஒரு பேட்டி ஒன்று கொடுத்திருந்தார். அதில் பி.ஜே.பி-க்கு ஓட்டு கிடையாது என்று கூறியிருந்தார். அதனால் கொந்தளித்த பி.ஜே.பி-கட்சியினர், இவர் முஸ்லீம் என்றும், இந்துப் பெண்ணை இஸ்லாமியராக மாற்றி திருமணம் செய்துகொண்டார் எனவும், இவர் லவ் ஜிகாதி என்றும் செய்திகளை பரப்பிவந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் தான், அவரின் கல்யாண புகைப்படத்தை பதிந்து, அதற்கு பதிலடி கொடுத்தார்.இது தெரியாத, நெட்டிசன்கள், நவீன் இரண்டாம் திருமணம் செய்துகொண்டார் என்றெல்லாம் புரளியை கிளப்பி விட்டிருக்கிறார்கள். இந்த புகைப்படம், நவீன் பதிவு திருமணம் செய்துகொண்ட போது எடுத்த புகைப்படம். அவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள் என்பது கூடுதல் தகவல். அவர் பிறப்பால் இஸ்லாமியர் என்பது உண்மைதான். ஆனால் நவீனும் அவரின் மனைவியும் சமத்துவத்தின் ஆதரவாளர்கள்.

More News >>