தேர்தல் நாள்: ரஜினி, அஜித், விஜய் ஓட்டுப் போட்டாச்சு.. நீங்க ஓட்டுப்போட போகலையா?

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் காலை 7 மணி முதல் பரபரப்பாக வாக்குப்பதிவு நடந்து வருகிறது.

சென்னை கோபாலபுரத்தில் உள்ள ஸ்டெல்லா மேரிஸ் மகளிர் கல்லூரியில் நடிகர் ரஜினிகாந்த், காலையிலேயே தனது வாக்கினை பதிவு செய்தார்.

சென்னை நீலாங்கரையில் வாக்களிக்க மக்களோடு மக்களாக வரிசையில் காத்து நிற்கிறார் நடிகர் விஜய்.

திருவான்மியூரில் நடிகர் அஜித் தனது மனைவி ஷாலினியுடன் வந்து தனது வாக்கினை செலுத்தினார்.

நடிகை குஷ்பு தனது வாக்கினை பதிவு செய்தார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் உள்ள தனது சொந்த ஊரில் மக்களோடு மக்களாக நின்று தனது வாக்கினை பதிவு செய்தார்.

சென்னை, சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் பாஜக தமிழக தலைவர் மற்றும் தூத்துக்குடி வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜன் தனது வாக்கினை பதிவு செய்துவிட்டு, அனைவரும் வாக்களிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, புதுச்சேரி புஸ்ஸி வீதியில் உள்ள  பொதுப்பணித்துறை குடிநீர் பிரிவு அலுவலகத்தில் உள்ள வாக்குச்சாவடியில்  தனது வாக்கினை பதிவு செய்தார்.

நீங்க ஓட்டுப் போட கிளம்பிட்டீங்களா...

More News >>