சென்னை பொம்மை தயாரிப்பு ஆலையில் பயங்கர தீ விபத்து

சென்னையில் பொம்மை தயாரிப்பு ஆலையில் நள்ளிரவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் லட்சக்கணக்கில் மதிப்பிலான பொருட்கள் நாசாமானதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே பிரபல பொம்மை தயாரிப்பு தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. நள்ளிரவில் தொழிற்சாலைக்கு அருகே உள்ள மின்மாற்றியில் ஏற்பட்ட மின்கசிவால் பற்றிய தீ அருகில் உள்ள பொம்மை தொழிற்சாலைக்கும் பரவியது. தீ விபத்து குறித்து தகவல் அறிந்து, 5 இடங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பல மணி நேரம் போராடி ஆலையில் பற்றி எரிந்த தீயை வீரர்கள் அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் உயிர் சேதம் இல்லை என்று தீயணைப்பு படையினர் தெரிவித்தனர். இந்த விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலானதாக கூறப்படுகிறது. தீ விபத்தை தொடர்ந்து, அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் இருக்க வள்ளுவர்கோட்டம், நுங்கம்பாக்கம் பகுதிகளில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

பிரான்ஸின் 850 ஆண்டுகள் பழமையான நாட்டர்டாம் தேவாலயத்தில் பயங்கர தீ விபத்து
More News >>