அரவக்குறிச்சி உள்ளி்ட்ட 4 சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடும் அ.ம.மு.க. வேட்பாளர்கள் அறிவிப்பு....

அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நடைபெறும் இடைத்தேர்தலில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றம் கழகத்தின் (அ.ம.மு.க.) வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்ப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 18ம் தேதி மக்களவை தேர்தலும், 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் அமைதியாக நடந்து முடிந்தது. இந்தநிலையில், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம், சூலூர் மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய 4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அடுத்த மாதம் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதனையடுத்து இடைத்தோ்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் அனைத்து கட்சிகளும் செயல்பட்டு வருகின்றன.

அடுத்த மாதம் 19ம் தேதி நடைபெற 4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்களை அக்கட்சி தலைவர் ஸ்டாலின் அண்மையில் அறிவித்தார். இந்நிலையில், அந்த தொகுதிகளில் போட்டியிடும் தங்களது கட்சி வேட்பாளர்களை அ.ம.மு.க. இன்று அறிவித்துள்ளது.

அரவக்குறிச்சியில் சாகுல் ஹமீதும், சூலூர் தொகுதியில் சுகுமார், ஓட்டப்பிடாரத்தில் சுந்தர்ராஜன், திருப்பரங்குன்றத்தில் மகேந்திரனும் அ.ம.மு.க. சார்ப்பில் போட்டியிடுகின்றனர்.

புதிய அரசியல் கட்சியாக உருவெடுக்கும் அ.ம.மு.க.! பொதுச் செயலாளராகிறார் டி.டி.வி!!
More News >>