மகனை கொன்று விட்டு நாடகமாடிய தந்தை கைது

காஞ்சிபுரத்தில் பெற்ற மகனை கொன்று விட்டு நாடகமாடிய தந்தை மற்றும் மூத்த சகோதரனை போலீசார் கைது செய்தனர்.

காஞ்சிபுரத்தில் வசித்து வருபவர் மணி. இவரது மூத்த மகன் மோகனவேல். இளைய மகன் மகேஷ். சமீபகாலமாக மகேசுக்கு, அவரது தந்தை மற்றும் சகோதரர் மோகனவேல் ஆகியோரிடம் பிரச்சினை இருந்ததாக தெரிகிறது. இதனால் தனது தந்தை மற்றும் சகோதரருடன் மகேஸ் சரியாக பேசுவது இல்லை. இந்நிலையில் மகேஷ் இறந்து விட்டார்.

மகேஷ் தற்கொலை செய்து கொண்டதாக அவரது தந்தை மணி கூறினார். ஆனால் மணி தற்கொலை செய்யவில்லை கொலை செய்யப்பட்டுள்ளார் என போலீசாருக்கு செய்தி சென்றது. இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் தனது மகேஷேயை அவரது தந்தையும், மூத்த சகோதரர் மோகனவேலும் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

பெற்ற மகனையே கொலை செய்யும் அளவுக்கு தந்தை போனதற்கு காரணம் என்ன என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை.

சிறைக்கு செல்ல வேண்டும் என்பதற்காக அப்பாவியை கொலை செய்த நபர்
More News >>