இது அநியாயம்.. .சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் தீர்ப்புக்கு ரசிகர்கள் விமர்சனம் #VijayTv

விஜய் டிவியின்`சூப்பர் சிங்கர் ஜூனியர் 6’ நிகழ்ச்சியின், டைட்டில் வின்னராக ரித்திக் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

`சூப்பர் சிங்கர் ஜூனியர் 6’ நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில், நடைபெற்றது.ஷங்கர் மஹாதேவன், சித்ரா, எஸ்.பி.பி.சரண், கல்பனா ஆகிய 4 பேரும் நடுவர்களாக இருந்தனர். இறுதிச்சுற்றுக்கு ரித்திக், அனுஷ்யா, சின்மயி, பூவையார் ஆகிய  4 பேரும் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சூர்யா மற்றும் அஹானா வைல்ட் கார்ட் மூலம்  தேர்ந்தெடுக்கப்பட்டனர். இறுதியில் டைட்டில் வின்னராக ரித்திக் தேர்வு செய்யப்பட்டார். இரண்டாமிடத்தில் சூர்யாவும் மூன்றாம் இடத்தில் பூவையாரும் தேர்வு செய்யப்பட்டனர். விஜய் தொலைக்காட்சியின் ஃபேஸ்புக் பக்கத்தில் ரித்திக் தான் வின்னர் என அறிவித்து பதிவிட்டனர். அந்த பதிவுக்கு கீழ் பலர் பாராட்டு தெரிவித்து பதிவிட்டிருந்தாலும், பலர்  விஜய் டிவியை கடுமையாக விமர்சித்துள்ளனர்.  முதல் இடத்துக்கு தகுதியான அனுஷ்யாவுக்கு மூன்றாம் இடம் கூட கிடைக்காததே நெட்டிசன்களின் கொந்தளிப்புக்கு காரணம்.

மற்றொரு தரப்பு இம்முறை விஜய் டிவி ஓட்டு எண்ணிக்கையை அறிவிக்கவேயில்லையே என்றும் கேள்வியெழுப்பியுள்ளது. மக்கலை முட்டாளாக்க முயற்சி செய்கிறார்கள் என்று பலர் விமர்சித்து வருகின்றனர்.

மீண்டும் வரப்போகும் பிக் பாஸ்... கமல் கேட்ட சம்பளத்தால் தலைசுற்றிப்போன விஜய் டிவி

மீண்டும் வரப்போகும் பிக் பாஸ்... கமல் கேட்ட சம்பளத்தால் தலைசுற்றிப்போன விஜய் டிவி
More News >>