தூத்துக்குடியில் தம்பியை சுட்டு கொன்ற விஜய் ரசிகர் மன்ற தலைவர்

தூத்துக்குடியில் சொத்து தகராறில் தனது சொந்த தம்பியை விஜய் ரசிகர் மன்ற தலைவர் பில்லா ஜெகன் துப்பாக்கியால் சுட்டு கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடியை சோ்ந்த சகோதரர்கள் பில்லா ஜெகன் மற்றும் சிம்சன். மூத்தவரான பில்லா ஜெகன் தூத்துக்குடி தி.மு.க. வில் முக்கிய புள்ளியாக உள்ளார்.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக அமைப்பாளராக பில்லா ஜெகன் உள்ளார். மேலும், விஜய் ரசிகர் மன்ற தலைவராகவும் இருக்கிறார். இவருக்கும் இவரது தம்பி சிம்சனுக்கும் இடையே நீண்ட நாட்களாக சொத்து தகராறு இருந்து வந்தது.

இந்நிலையில் நேற்றிரவு சகோதரர்களுக்கு இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி மோதலானது.

பொறுமை இழந்த ஜெகன் கோபத்தில் துப்பாக்கியால் சிம்சனை சுட்டு விட்டார். இதில் சிம்சன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து பில்லா ஜெகன் தலைமறைவாகி விட்டார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் சிம்சனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும் தலைமறைவான பில்லா ஜெகனை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். பில்லா ஜெகன் மீது ஏற்கனவே ஒரு கொலை வழக்கு உள்ளதாக தகவல்.

சொத்துக்காக தனது சொந்த தம்பியை அண்ணன் கொலை செய்தது அந்த பகுதி மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

ஒட்டப்பிடாரத்தில் சுயேச்சையாக போட்டி? அதிமுகவை மிரட்டும் கிருஷ்ணசாமி!
More News >>