குடி போதையில் விளையாட்டாக தூக்கில் தொங்கியவர் பரிதாப பலி

திருப்பதி அருகே குடிபோதையில் விளையாட்டாக தூக்கில் தொங்கியவர் எதிர்பாராத விதமாக பரிதாபமாக உயிர் இழந்தார்.

திருப்பதி அருகே உள்ள திருச்சானூரில் மெக்கானிக்காக பணியாற்றி வந்தவர் சிவக்குமார். இவர் மது பழக்கத்துக்கு அடிமையானவர். சிவக்குமார் நேற்று மதியம் வழக்கம் போல் பணியை முடித்து வி்ட்டு வீட்டுக்கு வந்தார். வீட்டுக்கு வரும் போது நல்ல மது குடித்து இருந்தார்.

குடிபோதையில் சிவக்குமார் தனது நண்பருக்கு வீடியோ கால் செய்தார். பேனில் தூக்குமாட்டி தற்கொலை செய்ய போவதாகவும் அதை வீடியோவில் பார்க்கும்படியும் தனது நண்பரிடம் சிவக்குமார் சும்மா சொல்லி உள்ளார். பின் காத்தாடியில் துணியை தூக்கு கயிறு மாதிரி மாட்டி விட்டு தனது கழுத்தை அதில் மாட்டியுள்ளார்.

அப்போது எதிர்பாராதவிதமாக அவரது கழுத்தில் துணி இறுக்கமாக சிக்கி கொண்டது. இதனால் சிவக்குமார் மூச்சுவிட முடியாமல் திணறினார். கடைசியில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்து போனார். சிவக்குமார் விளையாடுவதாக முதலில் நினைத்த அவரது நண்பர், சிவக்குமார் துடிதுடிப்பதை பார்த்து பதற்றம் அடைந்தார். பின் உடனடியாக போலீசுக்கு அவர் தகவல் கொடுத்தார். போலீசார் சிவக்குமாரின் வீட்டுக்கு சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

போதையில் தகராறு செய்த கணவனின் தலையில் அம்மி கல்லை போட்டு கொன்ற மனைவி
More News >>