சுப்பிரமணிய சாமி பாஜகவுக்கு எதிராகவே பேசுவார் - காவிரி நீர் விவகாரத்தில் மழுப்பும் தமிழிசை

சுப்பிரமணிய சாமி பாஜகவுக்கு எதிராகவே கருத்து தெரிவிப்பவர் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்து போது கூறிய சுப்பிரமணிய சாமி, “காவிரி தண்ணீர் வேண்டும் என்றால் கிடைக்காது. தண்ணீர் வேண்டுமானால் கடலில் இருந்து உப்பை நீக்கி குடிக்க தண்ணீரும், விவசாயத்திற்கு தண்ணீரும் தாராளமாக உற்பத்தி செய்யலாம். முதலமைச்சருக்கு அதற்கான வழி தெரியாவிட்டால் என்னிடம் சொல்லட்டும். நான் வாங்கி கொடுக்கிறேன்” என தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் இது குறித்த கேள்விக்கு செய்தியாளர்களிடம் பதிலளித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன், “காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்காது என சுப்பிரமணிய சுவாமி கூறியது அவரது தனிப்பட்ட கருத்து, பாஜகவின் கருத்து அல்ல. சுப்பிரமணிய சாமி பாஜகவுக்கு எதிராகவே கருத்து தெரிவிப்பவர்” என்று மழுப்பலாக பதில் கூறியுள்ளார்.

More News >>