நேரம் ஆகியதால் சுங்கச் சாவடியை அடித்து நொறுக்கிய வாகன ஓட்டுநர்கள்

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே சுங்கச் சாவடியை வாகன ஓட்டுநர்கள் அடித்து நொறுக்கினர். போலீசார் அது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சோழவரத்தை அடுத்த நல்லூர் சுங்கச் சாவடியில் வட மாநில ஊழியர்கள் பணியில் உள்ளனர். அந்த வழியாகச் சென்ற வேன் ஓட்டுநர்கள் இருவரிடம் சுங்கக் கட்டணம் வசூலிக்கும் விவகாரத்தில் சுங்கச் சாவடி ஊழியர்களுக்கும் வேன் ஓட்டுநர்களுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக சுங்கச்சாவடி ஊழியர்கள் வேன் ஓட்டுநர்களை தாக்கியதாக கூறப்படுகிறது.

இந்த தகராறு காரணமாக சுங்கக் கட்டணம் வசூலித்து பிற வாகனங்களை அனுப்பி வைக்கும் பணி பாதிக்கப்பட்டதால் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலையும், போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. அதனால் வாகன ஓட்டுனர்கள் ஆத்திரம் அடைந்தனர்.

இதனையடுத்து வாகனம் ஓட்டுநர்கள் ஒன்றாகச் சேர்ந்து சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கினர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ஒடிசாவில் பா.ஜ. தலைவர் சுட்டு கொலை
More News >>