தோனி மட்டும் அப்படி செய்திருந்தால் அவ்வளவு தான் - சிலாகிக்கும் வாட்சன்

சென்னை அணி குறித்தும் கேப்டன் தோனி குறித்தும் புகழ்ந்து பேசியுள்ளார் வாட்சன்.

ஐதராபாத் அணிக்கு எதிரான நேற்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தவர் ஷேன் வாட்சன். 96 ரன்கள் எடுத்து சதம் அடிக்கும் வாய்ப்பை நழுவ விட்டாலும் நீண்ட நாட்கள் சரியாக ஆடவில்லை என்ற பெயரை மாற்றி ஃபார் முக்கு திரும்பினார். இந்த சீசன் முழுவதும் சொதப்பி வந்தால் அவர் மீது விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் அதனை பொய்யாக்கும் விதமாக அவரது நேற்றைய ஆட்டம் அமைந்தது.

இந்நிலையில் தனது ஆட்டம் குறித்து வாட்சன் தற்போது பேசியுள்ளார். அதில் "பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் மற்றும் கேப்டன் தோனி வைத்துள்ள நம்பிக்கைக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாது. நிறைய அணிகளில் விளையாடி உள்ளேன். ஆனால் சென்னை அணியை போல் வேறு எங்கும் எனக்கு இவ்வளவு வாய்ப்புகள் தரவில்லை. இந்நேரம் நான் வேறு அணியில் இருந்திருந்தால் என்னை அணியை விட்டே நீக்கி இருந்திருப்பார்கள். ஆனால் தோனியும், பிளமிங்கும் அப்படி செய்யவில்லை. மாறாக என் மீது நம்பிக்கை வைத்தனர். தோனி மட்டும் இல்லையென்றால் நான் இங்கு இல்லை" என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

More News >>