ஆண் குழந்தைக்கு ஒரு ரேட்.. பெண் குழந்தைக்கு ஒரு ரேட்.. கலர் குழந்தைக்கு தனி ரேட்.. நர்ஸ் அமுதாவின் பகீர் ஆடியோ ரிலீஸ்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் ஓய்வு பெற்ற நர்ஸ் அமுதா, குழந்தையை காசுக்கு வாங்க விரும்பும் ஒரு தம்பதியினரிடம் பேசும் பகீர் ஆடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.

ராசிபுரத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற நர்ஸ் அமுதா, அங்குள்ள பல அனாதை ஆசிரமங்களுடன் கூட்டு வைத்துக் கொண்டு, ஆதரவின்றி விட்டுச் செல்லப்படும் குழந்தைகளை ரேட் பேசி கடந்த 30 ஆண்டுகளாக விற்று வருவதாக வாடிக்கையாளர் ஒருவரிடம் பேசியுள்ள ஆடியோ லீக் ஆகியுள்ளது.

அந்த ஆடியோவில் ஆண் குழந்தை என்றால் 4 லட்சம் ரூபாய் என்றும், பெண் குழந்தைக் என்றால் 3 லட்சம் ரூபாய் என்றும் கருப்பு குழந்தை என்றால் ஒரு ரேட் மற்றும் கலர் குழந்தை என்றால் தனி ரேட் என அவர் பேசியுள்ளது நெஞ்சை பதறவைக்கிறது.

மேலும், 30 ஆண்டுகளாக கடவுளின் ஆசியுடன் எந்த குறையும் இல்லாமல் இந்த தொழில் நடக்கிறது என்று அமுதா கூறும் வார்த்தைகள் கொடுமையின் உச்சம்.

இதையெல்லாம் விட பெரிய கூத்து என்றால், அரசு அதிகாரிகளிடம் உங்களுக்கு அந்த குழந்தை பிறந்ததாகவே சான்றிதழ் வாங்கித் தருகிறேன் அதற்கு தனியாக 70 ஆயிரம் ரூபாய் தாருங்கள் என கூறுவது. அரசு அலுவலங்களில் லஞ்சம் எந்த அளவுக்கு தலை விரித்து ஆடுகிறது என்பதற்கு எடுத்துக்காட்டாக உள்ளது.

30 ஆண்டுகளாக ராசிபுரத்தில் நடக்கும் இந்த குழந்தை விற்பனையை தடுக்காமல் காவல் துறையினர் என்ன செய்து கொண்டு இருக்கின்றனர் என்ற கேள்வியும் எழுப்புகிறது.

கோமதி மாரிமுத்துவுக்கு ரூ.1 லட்சம் பரிசு..! –‘சபாஷ்’ ரோபா சங்கர்
More News >>