வாகனத்தை கழுவிய போது மின்சாரம் தாக்கியதில் வாலிபர் பரிதாப பலி

ஸ்ரீவில்லிபுத்தூரில் வாகனத்தை கழுவிய போது மின்சாரம் தாக்கியதில் வாலிபா் ஒருவர் பரிதாபமாக உயிர் இழந்தார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சுந்தரபாண்டியம் பகுதியை சேர்ந்தவர் சசிகுமார் (வயது25). இவர் ஸ்ரீவில்லிபுத்தூர்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் செயல்படும் இரு சக்கரவாகன நிறுவனத்தில் இரு சக்கர வாகனத்துக்கு வாட்டர் சர்வீஸ் செய்யும் பணியில் இருந்தார்.

வழக்கம் போல மோட்டாரை இயக்கி தண்ணீரால் வாகனத்தை கழுவும் பணியில் இவர் ஈடுபட்டு இருந்தபோது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலயே உயிரிழந்தார். ஸ்ரீவில்லிபுத்தூர் போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கரண்ட் இல்லைனா டார்ச்லைட்ட வச்சா ஓட்டுப் போட முடியும்.. ஒருவழியாக ஓட்டுப் போட்டார் கமல்ஹாசன்!
More News >>