தொடர் தோல்வியை தவிர்க்குமா கொல்கத்தா? டாஸ் வென்று பந்து வீசுகி்றது ராஜஸ்தான்!

கொல்கத்தாவின் ஈடன் கார்டனில் நடைபெறவுள்ள 43வது ஐபிஎல் லீக் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்துள்ளது.

ஆரம்பத்தில் ரஸலின் அசுரத்தனமான ஆட்டத்தால் வெற்றி பெற்று வந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அதற்கடுத்து தொடர்ந்து 6 தோல்விகளை சந்தித்துள்ளது.

இந்நிலையில், இன்றைய போட்டியில் வெல்லும் முனைப்புடன் கொல்கத்தா அணி பேட்டிங் செய்யும் என்பதால், ஆரம்பம் முதலே ரசிகர்களுக்கு இன்றைய போட்டி விறுவிறுப்புக்கு பஞ்சமின்றி காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மறுமுனையில் புள்ளிப்பட்டியலில் 8வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற நிலையில் இருப்பதால், இந்த போட்டி இரு அணிகளுக்கும் சரியான பலப்பரிட்சையாகவே இருக்கும்.

கொல்கத்தா அணியில் கிறிஸ் லின் மற்றும் சுனில் நரைன் நல்ல தொடக்கத்தை தந்தார்கள் என்றால், கடைசியில் வரும் ஆண்ட்ரு ரஸல் அடித்து ஆடுவது கொல்கத்தா அணியின் வெற்றிக்கு உதவியாக இருக்கும்.

ரகானேவுக்கு பதிலாக ஸ்டீவ் ஸ்மித்தை களமிறக்கியுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்துக்கு சென்றுள்ளதால், ஸ்டீவ் ஸ்மித் தனது பழைய மேஜிக் ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

கோலியின் சதத்துக்கு முன் சரண்டர் ஆன நைட்ரைடர்ஸ் – 10 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!
More News >>