சென்னை அடையாற்றில் மிதந்த ஆண் சடலம்- கொலையா? தற்கொலையா?

சென்னை அடையாற்றில் மிதந்த ஆண் சடலத்தை கைப்பற்றிய போலீசார் அது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை அடையாறு திரு.வி.க பாலத்தின் அருகே அடையாற்றில் சடலம் ஒன்று மிதப்பதாக பொதுமக்கள் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். சடலம் கரை ஒதுங்கும் வரை காத்திருந்து போலீசார் அப்பகுதி இளைஞர்கள் உதவியுடன் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

கைப்பற்றப்பட்ட சடலம் சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் என்பது மட்டுமே தற்போது விவரம் தெரியவந்துள்ளது. மற்றபடி எந்தவிவரங்களும் தெரியவில்லை. காவல் நிலையங்களில் உள்ள மாயமானவர்களின் பட்டியலை வைத்து விசாரணை நடத்தி வரும் போலீசார், அடையாளம் தெரியாத இந்த இளைஞர் கொலை செய்து வீசப்பட்டாரா? அல்லது தற்கொலையா? என சாஸ்திரி நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருத்தாசலம் ஏரியில் ஒரு வாரமாக மிதந்த பெண் சடலம்: பாலியல் பலாத்காரம் செய்து கொலையா?
More News >>