சிம்புவின் திருமணம்..? விதி என்னை இப்படி வைத்திருக்கிறது...! -டி.ராஜேந்திரன்

சிம்புவின் திருமணம் குறித்த கேள்விக்கு டி.ராஜேந்திரன் எமோஷனலாக பதிலளித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய டி.ராஜேந்திரன், ‘எனது இளைய மகன் குறளரசனின் திருமணம், பெண் வீட்டார் இல்லத்தில் மிகவும் எளிமையாக நடந்தது. இவர்களின் திருமணம் வரவேற்ப்பு சென்னையில் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடந்தது. எனது மகள் திருமணத்தின் போது  ஊடக நண்பர்கள் உட்பட அனைவருக்கும் அழைப்பு விடுத்திருந்தேன். அப்போது, அரங்கமே நிரம்பியது. கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. ஆகையால், மீண்டும் இந்த நிலைமை ஏற்படாமல் தடுக்கவே, குறளரசனின் திருமண வரவேற்புக்கு முக்கியமானவர்களுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டது. இதுதான் உண்மை. திருமணத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி. அதோடு, குறளரசனின் திருமணம் தொடர்பான செய்திகளை வெளியிட்ட ஊடகத்துறை நண்பர்களுக்கும் எனது நன்றி என தெரிவித்தார்’.

அப்போது, சிம்புவின் திருமணம் எப்போது நடைபெறும் என்ற கேள்வி  டி.ராஜேந்திரனிடம் முன்வைக்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், ‘இறைவன் அருளால் விரைவில் நடக்கும். இந்த மாதிரி கேள்விகள் தான் மிகவும் மனத்தாங்கலாக இருக்கிறது. இந்த கேள்வியைக் கேட்கும் உங்கள் மீது ஆதங்கம் இல்லை. இந்த கேள்வியைக் கேட்கும் வகையில் எனது நிலைமையை விதி வைத்திருக்கிறது’ என்றவர் கண்கலங்கி விட்டார்.

More News >>