`இந்த பார்ட்னர்ஷிப் என்றென்றும் தொடரும் - ஹிட் மேன்-க்கு தவானின் வைரல் வாழ்த்து

இந்திய கிரிக்கெட் அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன் ‘ஹிட் மேன்’ ரோஹித் சர்மாவுக்கு சமூக வலைதளத்தில் பிறந்தநாள் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் துவக்க வீரர் ரோகித் சர்மா. சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் ஒருமுறை சாத்தியமில்லை என கருதப்படும் இரட்டை சதத்தை மூன்று முறை கடந்த ஒரே வீரர் என்ற வரலாறு படைத்தவர். தவிர, ஒருநாள் அரங்கில் அதிகபட்ச ஸ்கோரான 264 ரன்கள் அடித்து இமாலய சாதனை படைத்தவர். ஒருநாள் போட்டியில் அதிகபட்ச ரன்(264) அடித்த வீரர் என்ற பல்வேறு சாதனைகளையும் தன் வசம் வைத்துள்ளார். கோலி ஓய்வில் இருந்தால் இந்திய அணிக்கு கேப்டன் பொறுப்பையும் ஏற்று பல்வேறு வெற்றிகளை குவித்துள்ளார்.

தவிர, சர்வதேச டி-20 கிரிக்கெட்டில் 4 சதம் அடி த்த முதல் வீரர். மேலும் டி-20 அரங்கில் அதிக அரைசதம் கடந்த (19 அரைசதம்) வீரர் என்ற பெருமை பெற்றவர். ஐசிசி ஒரு நாள் போட்டிகளுக்கான பேட்ஸ்மேன் தரவரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ளார். இன்று இவர் தனது 32வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையொட்டி அவர் வாழ்த்து மழையில் குவிந்து உள்ளார். சச்சின் முதல் பல்வேறு வீரர்கள், பிரபலங்கள் அவரை வாழ்த்தி வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அந்தவகையில் ரோஹித் உடன் ஓப்பனிங் பாட்னரான ஷிகர் தவான் கூறிய வாழ்த்து தற்போது வைரலாகி வருகிறது.

"கிரிக்கெட்டிலும், கிரிக்கெட்டுக்கு வெளியிலும் இந்த பார்ட்னர்ஷிப் என்றென்றும் தொடரும்" என்று பார்ட்னர் தவான் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். 2013-ம் ஆண்டு முதல், ஷிகர் தவானுடன் சேர்ந்து இந்திய அணிக்காக தொடக்க வீரராகக் களமிறங்கினார். இதுவரை 101 இன்னிங்ஸில் ஓப்பனிங் களமிறங்கியுள்ள இந்த இணை, 4,541 ரன்கள் சேர்த்துள்ளனர். கிரிக்கெட்டை தாண்டியும் இருவரும் நல்ல நட்பை கொண்டுள்ளனர். அதனை குறிப்பிட்டே தவான் வாழ்த்துக் கூறியுள்ளார்.

More News >>