டாஸ்மாக் கடையில் சரக்கு மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள்

கோத்தகிரியில் டாஸ்மாக் கடையை உடைத்து பணம் மற்றும் மதுபாட்டில்களை திருடி சென்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. டாஸ்மாக் கடை மேலாளர் கடையை திறக்க வந்த போது கடும் அதிர்ச்சி அடைந்தார். கடை உடைக்கப்பட்டு மதுபாட்டில்களும், பணமும் திருடு போயிருந்தது.

இதனையடுத்து கடை மேலாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். கடையில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்த பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில், நள்ளிரவில் கடையின் கூரை வழியாக கடைக்குள் புகுந்த 2 பேர் மதுபாட்டில்களையும், பணத்தையும் சாக்கில் மூட்டையாக கட்டி வந்த வழியே தப்பி சென்றது தெளிவாக பதிவாகி இருந்தது.

போலீசார் தப்பி சென்ற திருடர்கள் இரண்டு பேரையும் தீவிரமாக தேட தொடங்கினர். இந்த நிலையில் தேவாரம் பகுதியில் தலைமுறைவாக இருந்த திருடர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

மோடி கோஷம்; நிதிஷ் முகம் சுளிப்பு! பீகாரில் தே.ஜ. கூட்டணியில் அதிருப்தி!
More News >>