கொடுத்த கடனை திருப்பி கேட்டவருக்கு நேர்ந்த பரிதாப முடிவு

நாகர்கோவிலில் கடன் கொடுக்கல் வாங்கல் தகராறில், கடன் வாங்கியவர் மண்ணெண்ணெய்யை உடலில் ஊற்றிக் கொண்டு தற்கொலை மிரட்டல் விடுத்த போது தீப்பற்றியதில் கடன் கொடுத்த பெண் உயிரிழந்தார்.

சுய உதவிக்குழு நடத்தி வரும் அம்பிகா என்வபரிடம் ராமன்புதூரைச் சேர்ந்த தங்கம் என்பவர் 4 லட்சம் ரூபாய் வரை கடன் வாங்கி இருந்ததாகக் கூறப்படுகிறது. பல நாள் இழுத்தடிக்கவே நேற்று கடனைக் கேட்டுச் சென்ற போது, உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றிக் கொண்டு தங்கம் தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.இதைத் தடுக்க அம்பிகா முயன்ற போது இருவரது உடலிலும் தீப்பிடித்தது.

இதில் அம்பிகா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 95 சதவீத தீக்காயங்களுடன் தங்கம், உயிருக்குப் போராடி வருகிறார். அம்பிகாவின் மகளுக்கு அடுத்த மாதம் திருமணம் நடக்க உள்ள நிலையில், அவர் உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இலங்கை குண்டு வெடிப்பில் தொடர்புடைய தீவிரவாதி சென்னையில் சந்தித்த நபர்களிடம் அதிகாரிகள் அதிரடி விசாரணை

More News >>