ஜெயம் ரவியின் 25வது படத்தை இயக்கப்போவது யார் தெரியுமா

ஜெயம் ரவி நடிப்பில் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் உருவாக இருக்கும் 24வது படத்தின் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

ஜெயம்ரவி நடிப்பில் உருவாகிவரும் 24வது படத்துக்கு கோமாளி என்ற தலைப்பு உறுதியாகியுள்ளது. இப்படத்தை பிரதீப் ரங்கநாதன் இயக்கிவருகிறார். படத்தில் ஜெயம்ரவிக்கு ஜோடியாக காஜல் அகர்வால் மற்றும் சக்யுக்தா ஹெக்டே நடிக்கிறார்கள். படத்தை ஐசரி கணேஷ் தயாரித்துவருகிறார். ஹிப்ஹாப் ஆதி இசையமைக்கும் இப்படத்துக்கு ஒளிப்பதிவை ரிச்சர்ட் எம்.நாதன் கவனித்துவருகிறார்.

காமெடி எண்டர்டெயின்மெண்ட் படமாக உருவாகிவரும் இப்படத்தில் டைம் டிராவல் சார்ந்த காட்சிகளும் வருகிறதாம். ஜூன் மேல் படத்தை வெளியிடவும் படக்குழு திட்டமிட்டிருக்கிறது. படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. ஜெயம்ரவியின் 25வது படத்தை யார் இயக்குவார் என்பது கேள்விக்குறியாகவே இருந்தது. ஜெயம் படத்தின் மூலம் ரவியை அறிமுகப்படுத்திய அவரின் சகோதரர் ராஜா இயக்குவார் என்றே சொல்லப்பட்டது. அது தனி ஒருவன் 2 படமாக இருக்கலாம் என்று கூறப்பட்டது. ஆனால் ஜெயம் ரவியின் 25வது படத்தை போகன் பட இயக்குநர் லெக்‌ஷ்மன் இயக்கவிருக்கிறார். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது.

அமேதி, ரேபரேலியில் இன்று ஓட்டுப் பதிவு...! ராகுல், சோனியாவுக்கு வாக்களியுங்கள்...! மாயாவதி பகிரங்க அழைப்பு!
More News >>