சிறந்த பாக்சர் மோடி... முதல் குத்து அத்வானிக்கு...! மேடையில் நடித்துக் காட்டிய ராகுல்காந்தி!

குத்துச்சண்டை களத்தில் இறங்கிய பாக்சர் மோடியின் முதல் குத்து அவருக்கு பயிற்சி கொடுத்த மூத்த தலைவரான அத்வானிக்குதான் என ராகுல்காந்தி மேடையில் குத்துச்சண்டை வீரர் போல் நடித்துக் காட்டி விமர்சனம் செய்தது அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தது.

மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடியை பல்வேறு பட்டப்பெயர் சூட்டி சகட்டுமேனிக்கு விமர்சித்து வருகிறார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. இன்று அரியானாவில் நடந்த ஒரு கூட்டத்தில் பேசிய ராகுல், பிரதமர் மோடிக்கு பாக்சர் பட்டம் கொடுத்து, ஏகத்துக்கும் கிண்டல் செய்து விமர்சித்தார்.

அரியானா மாநிலம் பிவானி தொகுதியில் நடைபெற்ற பிரசாரத்தின் போது ராகுல் காந்தி பேசுகையில், பிரதமர் மோடி, 56 இன்ச் மார்புடன் ஒரு குத்துச்சண்டை வீரராக விவசாயிகளின் பிரச்சினை, வேலைவாய்ப்பின்மை, ஊழல் ஒழிப்பு உள்ளிட்ட விவகாரங்களுக்கு எதிராக போரிட களத்தில் இறங்கினார். அப்போது அவரது பயிற்சியாளர் அத்வானி மற்றும் நிதின் கட்கரி, அருண் ஜெட்லி போன்ற மூத்த நிர்வாகிகள் உடனிருந்தனர். குத்துச்சண்டை களத்தில் இறங்கிய மோடி, அவரது முதல் குத்தை (பஞ்ச்) மூத்த தலைவரான அத்வானியை அவமதிக்கும் விதமாக அவர் மீது தான் தொடுத்தார்.. அதற்கடுத்த குத்துகளின் மூலம் சிறு, குறு வணிகர்களை ஜிஎஸ்டி என்ற பஞ்ச் மூலம் ஒழித்துக்கட்டினார்.

பிரதமர் மோடியின் செயல் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கு பதிலாக அத்வானியை ஓரங்கட்டுவதில் தான் இருந்தது. அடுத்தடுத்து நிதின் கட்கரி, அருண் ஜெட்லி போன்றோரையும் குத்து விட்டு காலி செய்தார் என்று கிண்டலாக ராகுல் காந்தி விமர்சித்தார். அப்போது நிஜ குத்துச்சண்டை வீரர் போலவே ராகுல் காந்தி, மேடையில் நடித்துக் காட்டினார்.

ராகுல் பிரசாரம் செய்த அரியானாவின் பிவானி தொகுதியில் தான் நம் நாட்டின் தலை சிறந்த குத்துச்சண்டை, மல்யுத்த வீரர்கள் பலருக்கும் பயிற்சியளிக்கும் மையங்கள் பல உள்ளன. குத்துச்சண்டையில் உலக அளவில் பல பதக்கங்கள் வென்று இந்தியாவுக்கு பெருமை தேடித் தந்த விஜேந்தர் சிங் உள்ளிட்ட பலர் இங்கு தான் பயிற்சி பெற்றனர். விஜேந்தர் சிங்கும் டெல்லி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்ப்பில் போட்டியிடுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ராஜீவ் காந்தியை ஊழலில் நம்பர் ஒன் என்ற மோடி.. ராகுல் உருக்கமாக டிவிட்டரில் பதில்
More News >>