பார்வையற்றோர் கிரிக்கெட் அணிக்கும் அங்கீகாரம் வேண்டும்: சச்சின் கோரிக்கை

பார்வையற்றோருக்கான கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வரும் இந்திய பார்வையற்றோர் அணியினருக்கும் சரியான அங்கீகாரம் கிடைக்க வேண்டுமென இந்தியக் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் கோரிக்கைவிடுத்துள்ளார்.

இந்திய பார்வையற்றோர் கிரிக்கெட் அணியினர் சர்வதேச அளவில் நடக்கும் பார்வையற்றோர்களுக்கான கிரிக்கெட் போட்டிகளில் பங்குபெற்று வருகின்றனர். உலக அளவில் நடக்கும் கிரிக்கெட் போட்டிகளில் நான்கு முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளனர்.

இதுபோல் இந்தியாவுக்காகப் பல வெற்றிகளைப் பெற்றுத் தரும் பார்வையற்றோர் கிரிக்கெட் அணியினருக்கு பிசிசிஐ என்ற கிரிக்கெட் அமைப்பின் மூலம் சரியான அங்கீகாரம் கிடைக்கவேண்டும் என சச்சின் டெண்டுல்கர் வேண்டுகோள்விடுத்துள்ளார்.

மேலும் இந்த அணியினருக்கான பென்சன் திட்டத்தையும் அறிமுகப்படுத்தி பிசிசிஐ இந்த அணியின் நிர்வாகத்தையும் ஏற்று நடத்த வேண்டும் என்றும் சச்சின் கோரிக்கை வைத்துள்ளார்.

More News >>