மு.க. ஸ்டாலினின் முதல்வர் கனவு என்றுமே பலிக்காது ஓபிஎஸ் ஆருடம்!

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலை முன்னிட்டு அங்கு அதிமுக சார்பில் போட்டியிடும் முணியாண்டியை ஆதரித்து துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இன்று பெரிய ஆலங்குளத்தில் தேர்தல் பிரசாரம் செய்தார்.

அப்போது, அராஜக போக்கை கடைபிடிக்கும் திமுக தேர்தலில் வெற்றி பெறாது என்றும், முதல்வராகும் மு.க. ஸ்டாலினின் கனவு என்றுமே பலிக்காது என்றும் கூறினார்.

இந்த இடைத்தேர்தல் தான் அதிமுகவுக்கு கடைசி தேர்தல் என துரை முருகன் கூறுவது எல்லாம் நகைப்புக்கு உரியதாகவே இருக்கிறது என்ற ஓபிஎஸ், 28 ஆண்டுகளாக அதிமுக அசைக்க முடியாத கட்சியாக மக்களின் பேராதரவுடன் திகழ்கிறது என்றார்.

ஜெயலலிதாவின் ஆன்மாவுக்கு பயந்து அதிமுகவினர் நேர்மையான அரசியல் பாதையில் சென்று கொண்டிருப்பதால், என்றுமே அதிமுகவின் வெற்றியை யாராலும் பறிக்க முடியாது என்றும் கூறினார்.

மேலும், அதிமுக ஆட்சியில் மின்வெட்டு இல்லாத மாநிலமாக தமிழகம் மாறியுள்ளது என்றும், அண்டை மாநிலங்களுக்கு 3000 மெகா வாட் மின்சாரத்தை வழங்கி வரும் அளவுக்கு தமிழகம் முன்னேறியுள்ளதற்கு அதிமுக ஆட்சியே காரணம் என ஓ.பன்னீர் செல்வம் பிரசாரம் செய்தார்.

சபாநாயகர் முடிவே சரி...! நீதிமன்ற உத்தரவு செல்லாது..! தனபாலுக்கு ஆதரவாக பி.எச்.பாண்டியன் கர்ஜனை
More News >>