போனை ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட்ட விஷால்.. பிரச்னை தீர்ந்தது எப்படி? அயோக்யா ரிலீஸ் பின்னணி

விஷால் நடிப்பில் வெங்கட்மோகன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் அயோக்யா இன்று வெளியாகிறது.

விஷாலின் அயோக்யா திரைப்படம் மே 10ஆம் தேதியான நேற்று வெளியாக வேண்டியது. ஆனால் வெளியாகவில்லை. ரசிகர்கள் ஆன்லைனில் புக் செய்தும், திரையரங்கிற்கு வந்தும் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் வெளியான டெம்பர் படத்தின் தமிழ் ரீமேக் தான் அயோக்யா. இப்படத்தை தயாரித்த மது, படத்தின் தமிழ் ரீமேக்கை பெற்று படமெடுத்தார். ஆனால் அதற்கு முன்னதாக அனைத்து மொழி உரிமையை மனிஷ் என்பவர் பெற்றிருந்தார். இந்நிலையில் தமிழில் மட்டும் தனியாக எப்படி உரிமை வழங்க முடியும் என்று பஞ்சாயத்தை துவங்கினார் மனிஷ். சட்டப்படி அயோக்யா படமும் எனக்கு தான் சொந்தம் என்று கூறினார். இதன் காரணமாக படம் வெளியாகவில்லை.

முந்தைய நாள் இரவு துவங்கிய பேச்சுவார்த்தை நேற்று பகல் வரை தொடர்ந்தது. விஷால் கடும் முயற்சி எடுத்தும் எந்த பலனுமில்லை. மூன்று கோடி வரை அந்த தயாரிப்பாளர் கேட்டதாக தெரிகிறது. அயோக்யா தயாரிப்பாளரான மதுவும் விஷால் தர வேண்டும் என்று கேட்டிருக்கிறார். ஆனால் விஷால் எதுவும் பேசாமல் சென்றுவிட்டார். போனையும் ஸ்விட்ச் ஆஃப் செய்திருக்கிறார். நேற்று மாலை வரை பேச்சுவார்த்தை நடந்திருக்கிறது.

இந்நிலையில் பட வெளியிடும் நிறுவனம் மற்றும் விநியோகஸ்தர்களின் அழுத்தம் காரணமாக முதலில் படத்தை வெளியிடுவோம். அதன் பிறகு, பணம் யார் தரவேண்டும் என்பதை முடிவு செய்துகொள்ளலாம் என்று பேசி முடித்திருக்கிறார்கள். அதன்படி, இன்று மதியம் மற்றும் மாலை காட்சிகளோடு அயோக்யா வெளியாகிறது.

அயோக்யா இன்று ரிலீஸ் இல்லை.. மனமுடைந்து போன விஷால்

 

More News >>